உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் நடைபெற்ற பொதுபோக்குவரத்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் கொடியசைத்து துவங்கி வைத்தார். நகர்மன்ற துணைத் தலைவர் த.டேனியல்ராஜ், போக்குவரத்து தொழிற்சங்கத்தின் துணைத்தலைவர் சு. மூர்த்தி, தலைவர் ராஜாராம், பொதுச்செயலாளர் இரகோத்தமன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.