திருவண்ணாமலை, ஜுலை 7- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நக ராட்சியில் உள்ள முக்கிய மான மக்கள் கூடும் இடங்க ளான நகராட்சி அலுவல கம், வட்டாட்சியர் அலுவல கம், காவல் நிலையம் மற்றும் பேருந்து நிலை யத்தில் பொதுக்கழிப்பறை கட்டித்தரவேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் கோரிக்கை விடு த்துள்ளது. வாலிபர் சங்கத்தின் வந்தவாசி வட்டாரக்குழு ஞாயிறன்று மாவட்ட பொரு ளாளர் சுகுமார் தலைமை யில் நடைபெற்றது. யாசர் அரபாத் வரவேற்றார். தற்கால அரசியலும் இளைஞர்களும் என்ற தலைப்பில் முன்னாள் மாவட்டத் தலைவர் முனை வர் சிவக்குமார் சிறப்புரை யாற்றினார். வாலிபர் சங்க வரலாறும் எதிர்கால பணிகளும் என்ற தலைப் பில் மாவட்டச் செய லாளர் பிரகாஷ் சிறப்புரை யாற்றினார். இந்நிகழ்வில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலாளர் ப.செல்வன், வந்தவாசி சிபிஎம் வட்டார செயலாளர் அப்துல்காதர் உள்ளிட் டோர் கலந்துகொண்ட னர். இதில், தென்னாங்கூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் பயன்படுத் தும் வகையில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும், தென்னாங்கூர் அரசு கலைக்கல்லூரியில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் சேர்க்கை எண்ணிக் கையை உயர்த்தி, பேராசிரி யர் பணியிடங்களை நிரப் பிட வேண்டும், வந்தவாசி தாலுகாவில் உள்ளூர் வளங்களை பயன்படுத்தி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உரு வாக்க வேண்டும், அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. நிறைவாக அண்ணாமலை நன்றி கூறி னார்.