சிதம்பரம், நவ 23- சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட் சிக்கு உட்பட்ட கதிர்வேல் நகர், கிருஷ்ண மூர்த்தி நகர், சரஸ்வதி அம்மாள் நகர், தமிழன்னை நகர், பெரியார் நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் 10-க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளனர். இங்கு 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் பெரியார் நகரில் வாய்க்கால் புறம்போக்கில் உள்ள இடத்தில் தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு தனியார் செல்போன் கோபுரம் அமைக்க ஏற்பாடு செய்துள்ளார். இதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஊராட்சி நிர்வாகமும் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி நிர்வாகத்தில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சி யருக்கு அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், அதனையும் மீறி தனியார் செல்போன் கோபுரம் அமைப்ப தற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு, காங்கிரஸ் நிர்வாகி கஜேந்திரன், திமுக ஒன்றியச் பிரதிநிதி சுப்பு வெங்கடேசன் ஆகி யோர் கலந்து கொண்டனர். சிதம்பரம் சாராட்சியரின் நேர்முக உதவி யாளரை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் நேரில் ஆய்வு மேற்கொண்டு உடனடி நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.