ராணிப்பேட்டை, ஆக. 13 -
எம்பிடி பேருந்து நிறுவனத்தில் பணி நீக்கம் செய்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொடர் பணி வழங்க நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி வாலாஜா தாலுகா பொது தொழிலாளர் சங்கம் சார்பில் சனிக்கிழமையன்று (ஆக. 12) ஆற்காடு பேருந்து நிலையத்தில் துண்டு பிரசுரம் விநியோகிக்கும் இயக்கம் நடைபெற்றது.
இதில் கட்சியின் ஆற்காடு தாலுகா குழு செயலாளர் எஸ். செல்வம்,ஆட்டோ சங்கத்தின் மாவட்ட தலைவர் பி. மணி, வேலு, ஹரி. கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.
எம்பிடி பேருந்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கு 53 ஆண்டுகள் உழைத்த தொழிலாளி தேவராஜ்க்கு பணிக்கொடை வழங்காமல் பணி நீக்கம் செய்துள்ளதாகவும், தொழிலாளி சுந்தரம் பிஎப் தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.