காஞ்சிபுரம், அக்.10- திருபெரும்புதூரில் விவசாய பயன்பாடில்லாததால் அங்குள்ள ஏரியில் படகு குழாம் அமைக்க வேண் டும் என சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்ற னர். காஞ்சிபுரம் மாவட்டம், திரு பெரும்புதூர் தாலுகாவில் திரு பெரும்புதூர் ஏரி, பிள்ளைபாக்கம் ஏரி உள்ளன. பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள இந்த ஏரிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளாகும். திருபெரும்புதூர் ஏரி 675 ஏக்கர் நீர்பிடிப்பு பகுதியும், 17.60 அடி ஆழமும் கொண்டது. பிள்ளை பாக்கம் ஏரி 1,096 ஏக்கர் பரப்பும், 0.122 டி.எம்.சி., கொள்ளளவும், 13.20 அடி நீர் மட்ட உயரமும் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலம் துவங்கியதும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நிலத்தடி நீரும் குறைந்து விடுகிறது. இதனால், மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். இதனை போக்க திரு பெரும்புதூர், பிள்ளைபாக்கம் ஏரி நீர் சென்னை மக்களின் குடிநீர் தேவையை ஓரளவிற்கு பூர்த்தி செய்யும் என்று சமூக ஆர்வளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: திருபெரும்புதூர் தாலுகாவில் திருபெரும்புதூர், பிள்ளைப்பாக் கம், வெங்காடு, இருங்காட்டுக் கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொழிற்சாலைகள் துவங்கப்பட்டுள் ளன. தற்போது, தொழிற்சாலைகள் தொடங்கி உள்ளதால் திருபெரும் புதூர் சுற்றுவட்டார பகுதியில் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளா கவும், தொழிற்சாலைகளாகவும் மாறியுள்ளன. திருபெரும்புதூர் நகராட்சியில் அடங்கிய திருபெரும் புதூர் ஏரியையும், பிள்ளைபாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரி ஆகிய இரண்டு ஏரிகளையும் ஆழப்படுத்தி கரையை பலப்படுத்த வேண்டும்’ என்றனர். மேலும், திருபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் ஐந்து சிப்காட் தொழிற்பூங்கா அமைந் துள்ளது. தற்போது, திருபெரும் புதூர் பகுதிக்கு நாட்டின் பல மாநிலங் களில் இருந்து பல ஆயிரக்கணக் கானோர் வந்து செல்கின்றனர். மேலும் திருபெரும்புதூரில், ராமானுஜர் கோயில், ராஜிவ்காந்தி நினைவகம் தவிர மக்கள் கண்டு ரசிப்பதற்கு பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதுமில்லை. இதனால், பொழுது போக்கிற்காக மக்கள் சென்னைக்கு சென்று வருகின்றனர். எனவே, திருபெரும்புதூர் ஏரியை சீரமைத்து படகு குழாம் அமைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க் கின்றனர். தொழிற்சாலைகள் தொடங்கி உள்ளதால், திருபெரும் புதூர் சுற்றுவட்டார பகுதியில் விவசாய நிலங்கள் வீட்டுமனை களாகவும், தொழிற்சாலைகளாக வும் மாறியுள்ளன. திருபெரும்புதூர் நகராட்சியில் அடங்கிய திருபெரும் புதூர் ஏரியையும், பிள்ளைபாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரி ஆகிய இரண்டு ஏரிகளையும் ஆழபடுத்தி கரையை பலப்படுத்தி வேண்டும். கால்வாய் சீரமைக்கப்படுமா? ஒவ்வொரு ஆண்டும் மழையின் போது ஏரி நிரம்பி உபரிநீர் கலங்கள் வழியாக வெளியேறி வருகிறது. ஆனால், இந்த இரண்டு ஏரிகளின் கால்வாய் முறையாக பராமரிக்கபடு வதில்லை. அதனால், ஒவ்வொரு ஆண்டும் ஏரி நிரம்பி குடியிருப்பு வீடுகளில் மழைநீர் புகுந்து விடு கிறது. இதனால் மக்கள் அவதிய டைந்து வருகின்றனர். எனவே, மழை காலம் துவங்குவதற்கு முன்பு ஏரிகளின் வரவு கால்வாயை சீரமக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.