districts

img

மூலக்கரை பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க பொது மக்கள் கோரிக்கை

திருவள்ளூர்,மே.5- மெய்யூர் செல்லும் முக்கிய சாலையை அடைக்காமல்,  போக்குவரத்துக்கு ஏதுவாக மூலக்கரை பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தச்சூர் முதல் சித்தூர் வரை 6 வழிச் சாலை அமைக்கும் பணி வேகமாக நடை பெற்று வருகிறது. இதற்காக முப்போகம் விளையக்கூடிய நிலங்கள், நீர் நிலைகள், மரம், செடி, கொடிகள் எல்லாவற்றையும் அழித்து தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் வெளிவட்ட மேம்பாலம் அமைத்து வருகிறது. இதில் திருவள்ளூர் அருகில் உள்ள மேலானூர் ஊராட்சிக்கு உட்பட்ட மூலக்கரை பகுதியில் மெய்யூர் செல்லும் முக்கிய சாலை ஆயிரக்கணக்கான மக்கள் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.  இது. இந்த சாலையை முற்றிலும் அடைத்து விட்டு 4 கி.மீ. தூரம் சுற்றி வரவேண்டும் என்கிறார்கள்.  இதனால் மேலானூர், சித்தம்பாக்கம், எறையூர், மொண்ண வேடு, ராஜபாளையம், மெய்யூர், மாளந்தூர் போன்ற 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், சிறு, குறு வியாபாரிகள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள்,  பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் என பல்லா யிரக்கணக்கானோர் வழியின்றி தவிக்கும் நிலை ஏற்படும். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் வட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, வட்டக் குழு உறுப்பினர்கள் கே.முருகன், எஸ்.கலை யரசன், டி.டில்லி ஆகியோர் தெரிவிக்கை யில், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை திருவள்ளூரில் உள்ள உழவர் சந்தைக்கு கொண்டு செல்வது, சென்னை, திருவள்ளூரில் உள்ள காக்களூர் மற்றும் திருபெருமந்தூர் ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில்  வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் என இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மெய்யூர் சாலையை முற்றிலும் அடைக்காமல் போக்கு வரத்துக்கு ஏதுவாக மூலக்கரை பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதிகாரிகள் மக்க ளின் இந்த கோரிக்கையை ஏற்காமல், சாலை அமைக்கும் பணியை தொடர்கின்ற னர். இதில் முழுக்க பெரும் முதலாளி களின் நலனுக்காக மட்டும் வெளிவட்ட சாலை அமைக்கப்படும் திட்டமாக உள்ளது. சாதாரண மக்களின், விவசாயி களின் நலனை கருத்தில் கொண்டு  தமிழ்நாடு முதலமைச்சர், மாவட்ட நிர்வாகம்  தலையிட்டு மூலக்கரை பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தியுள்ளனர்.