districts

img

ஆர்.கே.நகரில் தடையின்றி குடிநீர் விநியோகத்திற்கு ஏற்பாடு

சென்னை, மார்ச் 9- சென்னை ஆர்கேநகர் தொகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க புதிய நீர்த்தேக்க தொட்டி  அமைத்து தர சட்டமன்றத் தில் சட்டமன்ற உறுப்பி னர் ஜே.ஜே.எபினேசர் வேண்டுகோள் விடுத்திருந் தார்.  இதையடுத்து தற்போது கொருக்குப்பேட்டை பாரதி நகரில் 10 மில்லியன் லிட்டர்  கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி, 3 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் விடுபட்ட தெருக்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணியை தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் வெள்ளி யன்று (மார்ச் 8) காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதையடுத்து பாரதி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் வடசென்னை நாடாளு மன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி முன்னி லையில் சட்டமன்ற உறுப்பி னர் ஜே.ஜே.எபினேசர் பணியை தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஆர்.கே.நகர் தொகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கும் என அதிகாரி கள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மண்டலக் குழு தலைவர் நேதாஜி யு.கணேசன் மாமன்ற உறுப்பினர்கள் பா.விமலா, மணிமேகலை, குமாரி, தேவி, பவித்ரா, பகுதிச் செய லாளர்கள் ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.