பழங்குடி இன மாணவர்கள் கல்வியின் மீது ஆர்வத்தை தூண்டும் வகையில் "சிறகுகள் 200" என்ற திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வியாழனன்று (நவ 24) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலா ரூ16,000 வீதம் மொத்தம் ரூ.16 லட்சம் மதிப்பீட்டிலான கையடக்க கணினி(டேப்)களை இலவசமாக 100 பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கு ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.