districts

img

ரேசன் கடைகளில் காய்கறிகள் வழங்க மாதர் சங்கத்தினர் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 12 -

       விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரேசன் கடைகளில் காய்கறிகளை விற்பனை செய்ய வேண் டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

      இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதர் சங்க மாநிலப் பொருளாளர் வ.பிரமிளா மனு ஒன்றை அளித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

   தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தக்காளி விலை தங்கம் விலையோடு போட்டி போட்டு உயர்ந்து வருகிறது. காய்கறிகளும் விலை கட்டுக்கடங்காமல் செல்கிறது. இதனால் ஏழை  எளிய மக்களால் காய்கறி களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தடாலடியாக 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

    தக்காளி விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்  பார்த்திருந்த நிலையில், மீண்டும் விலை ஏற்றம்  கண்டு 150 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படு கிறது. இதேபோன்று பிற  காய்கறிகளின் விலைகளும்  கடுமையாக உயர்ந்துள் ளது.

    இந்த நிலையில், மாநிலம் முழுவதும் 300 நியாய விலை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப் பட உள்ளதாக அரசு அறிவித்திருப்பது போது மானதல்ல. எனவே, தக்காளி, சின்ன வெங்கா யம், இஞ்சி உள்ளிட்ட காய்கறிகளை அனைத்து நியாய விலை கடைகளிலும் குறைந்த விலையில்  விற்பனை செய்ய வேண்டும்.  

    அவை பொதுமக்கள் அனை வருக்கும் கிடைத்திட வழி வகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வின்போது சென்னை மாவட்ட நிர்வாகி கள் ஏ.சாந்தி, வி.தனலட்சுமி (மத்திய சென்னை), எஸ். சரவண செல்வி, ம.சித்ரகலா (தென்சென்னை), கோட்டீ ஸ்வரி, பாக்கியம் (வட சென்னை) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.