districts

img

வல்லூர் அனல் மின் நிலைய தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் சிஐடியு மாநிலத்தலைவர் சுகுமாறன் அறிவிப்பு

திருவள்ளூர், செப்.27- வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணி யாற்றி வரும் ஒப்பந்த தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அக் 10 அன்று சென்னையில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் தெரிவித்தார். மீஞ்சூர் அருகில்  வல்லூரில் செயல்பட்டு வரும் என்டிஇசிஎல் அனல் மின் நிலையத்தில் 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவரும்  2000 ஒப்பந்த தொழிலாளர் களை  பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 15  ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்றது.  புதனன்று (செப்.27) உண்ணாநிலை போராட்டம் நிறைவு பெற்றது. உண்ணாநிலை போராட் டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்துக் வைத்து பேசிய சிஐடியு மாநில பொதுச் செய லாளர் ஜி.சுகுமாறன்  கடந்த 13 நாட்களாக உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்ட பிறகும் தமிழ்நாடு அரசும்,  வல்லூர் அனல் மின் நிலைய நிர்வாகமும் பணி நிரந்தரம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.   இனி அடுத்த கட்ட போராட்டமாக வரும் அக்10 அன்று முதல்வர் கவனத்தை ஈர்க்க சென்னையில் பேரணி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அக்டோபர் 9 அன்று  சட்டமன்றம் கூட இருக்கிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் வல்லூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழி லாளர்கள் பணி நிரந்தர குறித்து கேள்வி எழுப்பு வார்கள் என்றும் அவர் கூறினார். இதன் பிறகும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி வலுவாக போராடுவோம் எனறும் அவர் தெரிவித்தார். இதற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் கே.விஜயன், மாவட்டப் பொருளாளர் என்.நித்தி யானந்தம், கிளைச் செயலாளர் சதீஷ், பொரு ளாளர் பிரபாகரன், துணை நிர்வாகிகள் சூரிய நாராயண், ரவணா, வெங்கட் சுப்பிரமணி ஆகி யோர் பேசினர். இதில் பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். உண்ணா நிலை முடிவுக்கு வந்த நிலையில் செப் 27 அன்று மாலையே தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.