districts

கூலி உயர்வை அமல்படுத்த மறுத்தால் போராட்டம் விவசாயத் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

ராணிப்பேட்டை, அக். 7- கூலி உயர்வை அமல்படுத்த மறுத்தால் ராணிப்பேட்டையிலுள்ள அனைத்து தாலுகா அலு வலகம் முன்பும் போராட்டம் நடைபெறும் என அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்டத் தலைவர் டி.சந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் விவசாய தொழிலாளிக்கான நடவு கூலி, கரும்பு வெட்டு வதற்கு, கரும்பு கட்டு வதற்கான கூலி தற்போது குறைவாக வழங்கப் படுகிறது.  ஆற்காடு, கலவை தாலுகாவில் நெல் நடவு கூலி ரூ. 70 என உள்ளதை சட்டப்படி 190 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கேற்ப ஒரு மணி நேர வேலைக்கு 100 ரூபாய் எனக் கணக்கிட்டு 4 மணி நேரத்திற்கு 400 ரூபாயும், பேரூராட்சிகளில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை அமல் படுத்த வேண்டும்.  இந்த கூலி உயர்வை அமல்படுத்தவில்லை என்றால் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக மாவட்டத் தலைவர் டி.சந்திரன் தலை மையில் நடைபெற்ற மாவட்டக் குழு கூட்டத்தில் மாநில துணைச் செய லாளர் முத்து, மாவட்டச் செயலாளர் பி.ரகு பதி, பொருளாளர் வெங்க டேசன், நிர்வாகிகள் விஜயன், மதியழகன், கலை வாணி, குமார், சின்ன பையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.