வீடட்றோருக்கு வீடு வழங்க வேண்டும், அரசு இடங்களில் குடியிருப்போருக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும், நகர்ப்புற வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திங்களன்று (அக். 17) கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.