districts

img

100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

கடலூர்,மே 7- 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் வட்டாரவளர்ச்சி அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர். ஆளவந்தார் தலைமையில் கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.  அந்த மனுவில் கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த 4 மாதமாக வேலை வழங்கப்படவில்லை. வறுமை ஒழிப்பு திட்டமான 100 நாள் வேலை இல்லாமல் கிராமபுற மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்க வேண்டும்.  கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடலூர் ஓ.டி, சான்றோர் பாளையம், சுத்து குளம், பீமாராவ் நகர், பச்சையாங்குப்பம், மணக்குப்பம், காரைக்காடு, பிள்ளையார் மேடு, கண்ணாரப்பேட்டை, பில்லாலி, தொட்டி, செம்மாங்குப்பம், வைரங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் உடனடியாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஹரி நாராயணன், தமிழ்ச்செல்வி, அப்துல்ஹஸ்மி, ஜெயபால், பரமசிவம், பழனி, மாலதி, வேலு, ஜெயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.