districts

img

சிதம்பரம் அருகே நரிக்குறவர்களின் உடலை சுடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு

சிதம்பரம், மே.7- சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சிக்குட்பட்ட தையா குப்பம் சாலையில் 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் குடும்பம் குடும்பமாக வசித்து வருகிறார்கள். இவர்களில் விஜி (34) அவரது தங்கை வெண்ணிலா (28)ஆகிய இருவரும் உடல்நலக்குறைவால் மரணமடைந்தனர். இருவரின் உடலையும் அந்த பகுதிலுள்ள சுடுகாட்டில் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.  இதற்கு அப்பகுதியில் உள்ள மாற்று சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் உடலைகளை புதைக்கவும் அனுமதிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து இருவரது சடலத்தையும் சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், டிஎஸ்பி ரமேஷ்ராஜ் உள்ளிட்டோர் அமைதிப்  பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும் உடன்பாடு எட்டப்படவில்லை. அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியின் வாய்க்கால் ஒரத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது.  பொனத்துல சாதியை பார்த்து சுடுகாட்டில் புதைக்க  மறுக்கும் இவர்கள் மனுசங்களா? மனிதநேயம் உள்ளவர்களா? என குறவர்கள்  அழுது புலம்பியது அந்த பகுதியில் இருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.