districts

img

பாஜக அரசின் அக்னி பாத் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பாஜக அரசின் அக்னி பாத் திட்டத்தை எதிர்த்து சிஐடியு  மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் செவ்வாயன்று ( ஜூன் 21)  குறளகம் அருகில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை தலைமையில் நிர்வாகிகள்  இரா.அருள் குமார்,  எஸ்.சந்தானம், சுந்தரம்,  கூ.நரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


ராணுவத் துறையில் ஒப்பந்த முறையை திணிக்கும் அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி சிஐடியு சார்பில் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில் கே.சம்பத் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி, நிர்வாகிகள் பாபு, நாராயணன், செல்வராஜ், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடசென்னை மாவட்டம் சார்பில் புதனன்று (ஜூன் 22) கொருக்குபேட்டையில் ரயில் மறியல் போராட்டம் மாவட்ட தலைவர் கே.எஸ். கார்த்தீஸ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணத்தமிழன், மாவட்ட பொருளாளர் ச.முருகேசன், மாவட்ட நிர்வாகிகள் விஜய், நித்திய ராஜ், பகுதி நிர்வாகிகள் எஸ்.நீதிதேவன்,சுரேஷ்,  ராஜா ஆகியோர் பங்கேற்று கைதாகினர்.


அஞ்சல் துறையில் தனியாரை புகுத்துவதை கண்டித்து புதனன்று (ஜூன் 22) தி.நகரில் உள்ள தென்சென்னை கோட்ட அலுவலக வளாகத்தில் கூட்டு போராட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.