சென்னை, மே 28 - சென்னையில் சொத்து வரி உயர்வு குறித்து ஒவ்வொருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப வருவாய்த் துறை முடிவு செய்துள் ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் சொத்துவரி உயர்த்தப்பட்டது. முந்தைய சென்னை மாநகராட்சி பகுதியில் குடியிருப்பு களுக்கு 600 சதுர அடி வரை 50 விழுக்காடும், 601 முதல் 1200 சதுர அடி கட்டிடங்களுக்கு 75 விழுக்காடும், 1201 முதல் 1800 சதுர அடி கட்டிடங்களுக்கு 100 விழுக்காடும், 1800 சதுர அடி மேல் உள்ள கட்டிடங்களுக்கு 150 விழுக்காடும் சொத்து சரி உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைக ளுக்கு 100 விழுக்காடும், குடியிருப்பு அல்லாத பகுதிகளில் 150 விழுக்காடும் உயர்த்தப் பட்டது. 2011-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி யுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிக ளுக்கு 25 விழுக்காடு முதல் 150 விழுக்காடு வரை சொத்து வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. வரி விதிக்கப்பட்ட பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு 50 விழுக்கா டும், முந்தைய சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு 100 விழுக்காடும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், திரையரங்கு களுக்கு புதிய முறையில் கட்டிடத்தின் பரப்ப ளவு, அடிப்படை தெரு கட்டணம் அடிப்படை யில் சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. காலி மனைக்கு 50 பைசாவாக இருந்த சொத்து வரி சதுர அடிக்கு ஒரு ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது. சொத்து வரி பொது சீராய்வு மேற்கொள் வது குறித்து பொது மக்களிடம் ஆட்சேபனை கருத்தினை கேட்டு அறிவிப்பாக வெளி யிட்டது. அறிவிப்பு வெளியிட்ட 30 நாட்க ளுக்குள் ஆட்சேபனையை தெரிவிக்க அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. கடந்த 11-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. 50-க்கும் குறைவான ஆட்சேபனை கடிதங்கள் வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து சொத்து வரி உயர்வு குறித்து மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 30-ந் தேதி நடைபெறும் மாநகராட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதைத் தொடர்ந்து சொத்து வரி உயர்வு குறித்து ஒவ்வொருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப வருவாய்த் துறை முடிவு செய்துள் ளது. ஜூன் மாதம் முழுவதும் இந்த பணி நடைபெறும்.