சென்னை, மார்ச் 11- இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ( கிரெடாய்) சார்பில் சென்னை சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த மார்ச் 8 முதல் 10 ஆம் தேதி வரை நடந்த 3 நாள் ஃபேர்ப்ரோ 2024 கண்காட்சியில் ரூ.260 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி கடந்த 10–ஆம் தேதி நிறைவு பெற்றது. 3 நாள் நடந்த இந்த கண்காட்சியை 31 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். இதில் மொத்தம் ரூ.260 கோடிக்கு மதிப்புக்கும் மேலான 302 சொத்துகள் முன் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் வரவிருக்கும் நாட்களில் பார்வையாளர்கள் தங்கள் தளத்தைப் பார்வையிட்ட பிறகு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவார்கள் என்பதால், முன்பதிவு ஒரு வாரத்தில் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த சாதனை, சந்தையில் வீடு வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் வளர்ந்து வரும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்று கிரெடாய் சென்னையின் தலைவர் எஸ். சிவகுருநாதன் தெரிவித்துள்ளார்.