districts

வீட்டுமனைகளுக்கு முறையான வடிகால்வாய் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை, ஏப். 8 - புதிய வீட்டு மனைகளை உருவாக்கும் போது, மழை நீர் வெளியேற்ற முறையான வடிகால் கால்வாய் அமைக்கப்படுவதை உறுதி செய்யும்படி, நகர் ஊரமைப்பு இயக்கு நரகத்துக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னைக்கு அருகே உள்ள ஒட்டியம் பாக்கம் கலங்கல் ஓடை நீர் வழித்தடத்தை அடுக்குமாடி குடியிருப்புகள் ஆக்கிர மித்துள்ளன. இதனால் பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தாமாக முன்வந்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதி துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சத்யகோபல் அமர்வு, விவசாய நிலத்தை விவசாயம் தவிர்த்த மற்ற பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கும் போது அனைத்து விதிகளும் முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி  செய்ய வேண்டும் என தமிழ்நாடு நகர் ஊரமைப்பு இயக்குநரகத்துக்கு உத்தர விட்டது. புதிய வீட்டு மனைகளை உருவாக்கும் போது மழை நீர் வெளியேற்ற முறையான வடிகால்வாய் அமைக்க படுவதையும் உறுதி செய்யவேண்டும். விதிகளை முறையாக  பின்பற்றாத கட்டுமானங்கள் மீது சட்டப்படி யான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வெள்ளநீர், நீர்நிலைகளுக்கு செல்ல ஏதுவாக  போதுமான வடிகால் கால்வா யினை நீர்வள ஆதார அமைப்பு ஏற்படுத்தி தர வேண்டும். வடிகால் கால்வாயை ஆக்கிர மித்துள்ளவர்களிடம்  அபராத தொகையை வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. ஒட்டியம்பாக்கம் கலங்கல் ஓடை  நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றவும், விதிகளை மீறி ஆக்கிரமித்த வர்கள் மீது சட்டப்படி  நடவடிக்கை எடுக்க வும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தவிட்ட தீர்ப்பாயம், ஆக்கிரமிப்பாளர்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.