10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்களுக்கு நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் சிலிண்டர் பில்லில் உள்ளபடி ரூ.1205 அரசே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது மாவட்டத் தலைவர் கோவிந்தம்மா, செயலாளர் தேவி, பொருளாளர் சுஜாதா, செயற்குழு உறுப்பினர் கஸ்தூரி,சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், தலைவர் வாசுதேவன் கலந்து கொண்டனர்.