districts

img

சமையல் பணி தருவதாக உறுதியளித்து ஆதரவற்ற பெண்ணை அலைக்கழித்த அதிகாரிகள்

திருவள்ளூர், ஆக 25-

       கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள ஏ.என்.குப்பத்தில் காலை உணவு வழங்கும் திட்டத்தில் பயிற்சிக்கு சென்றவருக்கு சமையல் வேலை தராமல் புதிய நபரை அனுமதித்து,  முறைகேட்டில் ஈடுபட்ட அதி காரிகள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் பிடிஒ விடம் வெள்ளியன்று (ஆக-25),  மனு அளித்துள்ளார்.

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள ஏ.என்.குப்பத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.இதில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை 52 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலை யில் தமிழ்நாடு அரசு 1 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் கொண்டு வந்துள்ளது.  

    இந்த சூழலில் ஏ.என்.குப்பத்தில் உள்ள நடு நிலைப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு சமைக்க அதே கிராமத்தை சேர்ந்த சர்மிளா (வயது 37), (இவர் கணவனால் கைவிடப்பட்டவர்), தேர்வு செய்யப்பட்டு, ஏற்கெனவே கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 3 நாட்கள் பயிற்சிக்கு முடித்து வந்துள்ளார். பின்னர் ஆகஸ்ட் 21 அன்று உப்புமா, சாம்பார் ஆகிய வற்றை மாதிரிக்காக சமைத்து கொடுத்துள்ளார். ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசி ரியர் அவரது சமையலை வெகுவாக பாராட்டியும் உள்ளனர். இதனை தொட ர்ந்து ஆகஸ்ட் 24 அன்று மாலை சமையல் பாத்திரங்கள், கேஸ், அடுப்பு ஆகிய பொருட் கள் வந்துள்ளது. அவற்றை எடுத்து சுத்தம் செய்து வைத்து விட்டு சென்றுள்ளார்.

   வெள்ளியன்று (ஆக -25), காலை சமைக்க பள்ளிக்கு வந்ததும் உங்கள் பெயர் பட்டியலில் இல்லை, வேறு நபர் நியமித்துள்ளோம் என தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். இதனை கேட்டதும் சர்மிளா மன முடைந்து போனார்.

    இதுகுறித்து பின்னர் வட்டார வளர்ச்சி அலு வலரை தொடர்பு கொண்டு கேட்டபோது எல்லா மகளிர் திட்டம் தான் பொறுப்பு என்கிறார்கள். கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜை நேரில் சந்தித்து முறையிட்டுள்ள னர். கணவர் கைவிட்ட நிலை யில்,  அரசு அதிகாரிகளும் பணி கொடுக்காமல் கை விட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியராவது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.