செங்கல்பட்டு மின் திட்டத்திற்கு உட்பட்ட மறைமலை நகர், திருப்பெரும் பதூர், திருமழிசை, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் மற்றும் எம்ஆர்டி ஆகிய 7 கோட்டங்களை கொண்ட விரிவ டைந்த மின் திட்டமாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) செங்கல்பட்டு மின் திட்ட பகுதியில் தொழிலாளர்களின் கோரிக்கைகளான பதவி உயர்வு, இட மாறுதல், உத்தரவுகள், பணப்பயன் கள் ஆகியவற்றை நிர்வாகத்திடம் சமரச மின்றி போராடி பெற்று வருகிறது. மின் துறையை பொதுத்துறையாக பாது காத்திடவும், தனியார்மயத்தால் தொழி லாளர்கள், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க போராட்டங்களை தனியாகவும், தொழிற்சங்க கூட்டு குழுவின் வாயிலாகவும் நடத்தப்படு கிறது.
ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப் படுத்த பல கட்ட போராட்டங்களை மின்ஊழியர் மத்திய அமைப்பு நடத்தியது. மேலும், உச்சநீதி மன்றம் சென்று 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை நிரந்தரப்படுத்தி யது. கேங்மேன் பணியாளர்களை எடுப்ப தற்கான போராட்டங்களை நடத்திய தோடு, நீதிமன்ற தடைகளிலும் தலை யீடு செய்து 5 ஆயிரம் பேர் எடுக்க இருந்ததை 10 ஆயிரம் பேராக எடுக்க சிஐடியு வழிவகை செய்தது. தொழிலாளர்களின் சொந்த மாவட்டங்களுக்கு பணியேற்பு செய்திட வும், பயிற்சி காலத்தை குறைத்து காலநிலை ஊதியத்தை வழங்கிட கோரி யும், மின் ஊழியர் மத்திய அமைப்பு போராடி வருகிறது. செங்கல்பட்டு மின் திட்டத்திற்கு தடைகளை தகர்த்து கூட்டுறவு சங்கத்தை துவக்கி உள்ளோம். 600க்கும் மேற்பட்ட உறுப்பி னர்களை சேர்த்து தொழிலாளர் களுக்கும் பொறியாளர்களுக்கும் பல கோடி ரூபாய் குறைந்த வட்டியில் கடன் கொடுத்து மின் ஊழியர் மத்திய அமைப்பு சாதித்துள்ளது.
செங்கல்பட்டு மின் திட்டத்திற்கு பணியமர்த்தப்படும் மேற்பார்வை பொறியாளர்கள் கடந்த சில வருடங் களாக ஓரிரு ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் நிலை உள்ளது. இங்கு பணியமர்த்தப்படும் மேற்பார்வை பொறியாளர்கள் அனைவரும் உடனடியாக இடமாற்றம் பெற்று செல்வதும் அல்லது ஓய்வு பெறுவது மாக இருந்து வருகின்றனர். இதனால் செங்கல்பட்டு மின் திட்டத்தில் தொழிலாளர்கள் பிரச்சனை களை பேசிடவும், சட்டப்படி, நியாயப்படி கிடைக்க வேண்டிய பயன்கள் ஏதும் தொழிலாளர்களுக்கு கிடைக்கா மல் பல மாதங்களாக காலதாமதம் ஏற்படும் நிலை உள்ளது. உதாரணமாக பதவி உயர்வுக்கு முன்பாக சீனியாரிட்டி லிஸ்ட் பதவி உயர்வுகள், இடமாறுதல் வழங்குதல், பாதுகாப்பு உபகரணங்கள், மழைக்கோட்டு, இரட்டிப்பு ஊதியம், போக்குவரத்து படிகள், ஜிபிஎப் கடன்கள் மற்றும் கணக்கு வரவு சீட்டு வழங்குவது போன்ற பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் தொடர்ந்து வருகின்றது.
செங்கல்பட்டு மின் திட்டத்தில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழி லாளர்கள் எண்ணிக்கை அனுமதிக் கப்பட்ட பதவிகள் களப்பிரிவில் 2938 ல் தற்போது 2043 பேர் மட்டுமே பணிபுரி கின்றனர். 895 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதேபோன்று அலுவலகப் பணியாளர்கள் புரவன்சியல் பதவிகள் அனுமதிக்கப்பட்ட இடங்கள் 1141 இதில் 810 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 331 இடம் காலியாக உள்ளது. செங்கல் பட்டு மின் திட்டத்தில் தற்போது 1200 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதனால் காலியாக உள்ள பணியிடத் தின் பணிகளையும், தற்போது உள்ள வர்களே கூடுதலாக பார்க்க வேண்டி யுள்ளது.
வேலைப்பளு ஒப்பந்தங்களையும் மீறி மின்வாரிய பணிகள் செய்திடவும், கட்டுமானப் பணிகளையும், விரி வாக்கப் பணிகளையும், களப்பிரிவு தொழிலாளர்களை செய்திட நிர்பந்திப்பதும் கணக்கீட்டு பிரிவு தொழி லாளர்கள் பதவி உயர்வு பெற்றாலும் மீண்டும் கணக்கீட்டு பணிகளை செய்திடவும், மூன்று நபர்கள் செய்திடும் கணக்கீட்டு பணிகளை ஒருவரை செய்திட நிர்பந்திக்கும் போக்குகள், கே2 ஒப்பந்தததாரர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணிகள் வழங்கிட மறுத்து பெரிய பெரிய ஒப்பந்த தாரர்களுக்கு பணிகளை வழங்குவ தும் செய்யப்பட்ட பணிகளுக்கு பணம் வழங்கிட காலதாமதம் ஏற்படுத்துவ தும் தொடர்கதையாகி வருகின்றது. செங்கல்பட்டு மின்திட்டத்தில் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிரான பிரச்சனைகளை சரிசெய்தி டும் வகையில் ஞாயிறன்று (ஜன.2) செங்கல்பட்டில் நடைபெறும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் செங்கல்பட்டு மின்பகிர்மான வட்டத்தின் 16ஆவது ஆண்டு பேரவையில் பல்வேறு தீர்மானங்களும், இயக்கங் களுக்கான திட்டமிடுதலும் செய்யப்பட இருக்கிறது.