ஒன்றிய அரசின் போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவை காட்டி புதுச்சேரி அரசின் போக்குவரத்து துறை, புதுச்சேரியில் இயங்கும் 15 ஆண்டுகள் முடிந்த அனைத்து மோட்டார் வாகனங்களுக்கு தரச்சான்று (எப்.சி) புதுப்பித்தலுக்கான கட்டணம் மற்றும் காலதாமத அபராதம் கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தி வசூலிப்பதை எதிர்த்து சிஐடியு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகி கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு தடை ஆணை பெற்று கொடுத்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யுவை சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மணவாளன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.