districts

img

பழங்குடி மக்களை சென்றடையாத திட்டங்கள் மலைவாழ் மக்கள் போராட்டம் நடத்த முடிவு

திருவண்ணாமலை,ஜூலை.14-

      திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடி மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேராதத்தை கண்டித்து. மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப் படும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

     திருவண்ணாமலை மாவட்ட மலைவாழ் மக்கள் சங்கத்தின் பேரவை கூட்டம் வந்தவாசி ஆண்டாள் திரு மண மண்டபத்தில் நடை பெற்றது. மாவட்ட செய லாளர் எம். மாரிமுத்து தலைமை தாங்கினார். கரும்பு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் பெ.அரிதாசு துவக்கி வைத்தார், மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டார செய லாளர் அப்துல் காதர், காட்டுநாயக்கன் சங்க பொதுச்செயலாளர் அய்ய னார், மாவட்ட துணைச் செயலாளர் ஏழுமலை ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா. சரவணன் சிறப்புரை யாற்றினார்.

      இதில், வந்தவாசி, தெள்ளார், பெரணமல்லூர் ஆகிய ஒன்றியங்களில் பழங்குடி மக்களுக்கு அரசு தொகுப்பு வீடுகள் 2017 முதல் இதுவரை வழங்கப்படவில்லை. தொகுப்பு வீடுகள் கட்டி முடிக்கப்படும், பய னாளிகளிடம் ஒப்படைக்க வில்லை, பழங்குடி மக்க ளுக்கு வீட்டுமனை பட்டா, நலவாரிய அட்டை, அரசு மானிய கடன் உள்ளிட்ட அரசு திட்டங்கள் எதுவும் வந்து சேரவில்லை.  எனவே,  பழங்குடி மக்களை புறக்கணித்துவிட்டு அரசு திட்டங்கள் செயல்படும் போக்கை  கண்டித்து, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில், மலை வாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.