தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை (ஜூன்4) நடைபெற்றது. சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல், சங்க உறுப்பினர்களுக்கு குளோபல் தனியார் மருத்துவமனையின் சிறப்புரிமை அட்டை மற்றும் ரெயின்கோட் வழங்கும் நிகழ்வை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கிவைத்தார். கிளீனிக்கல் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின், தலைமை செயல் அதிகாரி மருத்துவர் அலோக் குல்லார் , எவர்வின் பள்ளி குழுமத் தலைவர் பி.புருசோத்தமன் ஆகியோர் பங்கேற்று நலத்திட்டஉதவிகளை வழங்கினர். சங்கத்தலைவர் பி.ஜோதிராமலிங்கம், பொதுச்செயலாளர் எல்.சீனிவாசன், பொருளாளர் வி.சீனிவாசலு ஆகியோர் பங்கேற்றனர்.