பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் , இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய அரசின் அமெரிக்க சார்பு வெளியுறவு கொள்கைகளை கண்டித்தும் புதனன்று (அக் 25), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.மோகனா, கே.ராஜேந்திரன், ஆர்.தமிழ்அரசு உள்ளிட்ட பலர் பேசினர்.