districts

img

ஸ்ரீராம் இலக்கிய கழக போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

புதுச்சேரி, ஆக.2- ஸ்ரீராம் இலக்கிய கழகத்தின் சார்பில் ஒவ்வொரு வருடமும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான  திருக்குறள் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக அண்மையில் புதுச்சேரியில் உள்ள செயின்ட் ஆண்டனி உயர்நிலைப் பள்ளியில்  மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது. ஓவியப் போட்டியில் 369 மாணவர்களும், பேச்சு திறன் போட்டியில் 125 மாணவர்களும், கட்டுரைப் போட்டியில் 125 மாணவர்களுக்கு என புதுச்சேரி, கடலூர், விழுப்புரம்,  திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 619 மாணவர்கள் பங்கேற்றனர். இப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவில் காவல்துறை கண்காணிப்பாளர் வீர வல்லபன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கல்வியாளர்  ரங்கநாதன், இலக்கிய கழக நிர்வாகிகள் கார்த்திகேயன், மனோ, வைரக்கண்ணு உட்பட பலர் பங்கேற்றனர்.