கடலூர், ஜூன் 2- கடலூர் ஆக்கி அகாடமி சார்பில் சீனியர்க ளுக்கான மாநில அளவிலான ஆக்கி போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது. இந்த போட்டியில் சென்னை, கடலூர், புதுக்கோட்டை, கோவில்பட்டி, வேலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 14 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் சென்னை நகர காவல் அணி யும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை அணியும் மோதின. இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகி யோர் தொடங்கி வைத்தனர். இதில் சென்னை நகர காவல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முன்னதாக 3ஆவது, 4ஆவது இடத்திற்கான போட்டியில் எஸ்.கே.சி. அணியும், சோஷா அணியும் மோதின. இதில் சோஷா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். அகாடமி செயலாளர் கருணாகரன் வரவேற்றார். இதில் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, இந்திய ஆக்கி அணி பொருளாளர் சேகர் ஜே.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசும், சாம்பியனான சென்னை சிட்டி காவல் அணிக்கு சுழற்கோப்பையும் வழங்கினர். விழாவில் புனித வளனார் பள்ளி முதல்வர் அருள்நாதன், ஏ.எஸ். சொக்கலிங்கம், புதுச்சேரி ரெங்கராஜூ, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், ஆக்கி அகாடமி பொருளாளர் ராமச்சந்திரன், ராமச்சந்திரன், ராம் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.