districts

img

தடகளப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

கடலூர்,ஜூலை 1-- மாவட்ட அளவிலான தடகள போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த போட்டி 12, 14, 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட தடகள போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதையடுத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மாலையில் நடைபெற்றது. விழாவுக்கு தடகள சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொருளாளர் அசோகன், நியூ சினிமா தியேட்டர் உரிமையாளர் மோனிஷ் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து காவல் ஆய்வாளர் முத்துக்குமரன் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதில் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜசேகர், தேவ்நாத், முன்னாள் தடகள வீரர் நரேந்திரன், பயிற்சியாளர்கள் மாயகிருஷ்ணன், ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.