districts

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை,மே17-

   சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும்  மையங்களும்  இணைந்து  மே 19 (வெள்ளிக்கிழமை) அன்று  தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

   இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை - 32 கிண்டி , ஆலந்தூர் சாலை யில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு  அலுவலக வளாகத்தில் உள்ள  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்  மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம்  வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ,  கலை,  அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.

   இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.  இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப் படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்க ளும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

   இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in ) பதிவேற்றம் செய்யவேண்டும்.

   வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளு மாறு  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் கொ. வீரராகவ ராவ்  கேட்டுக்கொண்டுள்ளார்.