districts

img

தனியாருக்கு குளம் குத்தகை: கிராம மக்கள் எதிர்ப்பு

ஆரணி, பிப். 26- ஆரணி அருகே குளத்தை தனி யாருக்கு குத்தகை வழங்கியதைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆதனூர் கிராமத்தில்  4,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தின் மையப்பகுதியில் வண்ணார் குளம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக பொதுமக்கள் விவசாயத்திற்கும் குடி நீருக்கும் இந்த குளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வண்ணார் குளத்தை குடிமராமத்து பணியில் சுமார் 1 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொண்ட சீரமைப்பு பணியை தற்போது பாதி யில் நிறுத்திவிட்டு, ஊராட்சி மன்ற நிர்வாகம் தன்னிச்சையாக கிராமத்தில் குடிநீர் ஆதாரமாக உள்ள குளத்தை தனியாருக்கு மீன் குத்தகைக்கு விட்டுள்ளனர். இதைக் கண்டித்து கிராம மக்கள் ஒன்றிணைந்து குளத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக தனியாருக்கு தாரை வார்த்த குளத்தை மீண்டும் கிராம மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட நிர்வா கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.