districts

img

கடலூர் ஆட்சியர் அலுலகம் முன்பு தனியார் ஆலைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர், ஆக.5 - ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை உடனடி யாக பேசி முடிக்க வலியுறுத்தி, சிப்காட் வளாகத்தில் உள்ள டாக்ரோஸ் ஆலை தொழிலாளர்கள் கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் சிப்காட்டில் செயல்பட்டு வரும் டாக்ரோஸ் கெமிக்கல் இந்தியா நிறு வனத்தில் 235  தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். அவர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிவடைந்து 29 மாதங்கள் ஆகியும் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் பேசி முடிக்காமல் நிர்வாகம் காலம் கடத்தி வருகிறது.  ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகம் முன் வராதால் டாக்ரோஸ் நிர்வாகத்தைக் கண்டித்து, தொழிற்சங்கங்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான சம்பள உயர்வு, இதர சலுகைகள் வழங்க வலியுறுத்தி கடந்த ஜூலை 23 முதல் சிஐடியு, டிவிஎஸ் தொழிற்சங்கங்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, கடலூர் ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆக.5 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு டாக்ரோஸ் எம்பிளாய்ஸ் யூனியன் சிஐடியு சங்க தலைவர் ஆர்.கோவிந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் எம். தேவநாதன் பொருளாளர் பி.குமார், துணைத் தலைவர் ஆனந்த பாஸ்கர், டிவிஎஸ் தொழிற்சங்க தலைவர் சக்திவேல், செயலாளர் அருள் செல்வம், பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிஐடியு சிப்காட் தலைவர் ஆர்.ஆளவந்தார்,  செயலாளர் பி.குமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர். போராட்டத்தின் முடிவில் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.