districts

ஜிப்மர் ஊழியர்களை வஞ்சிக்கும் தனியார் நிறுவனம் பாதுகாப்புக்குழு ஆவேசம்

புதுச்சேரி, ஜூன் 7-

     ஜிப்மரில் பணியாற்றும் ஊழி யர்களை பணிநிரந்தரம் செய்ய  வேண்டும் என்று ஜிப்மர் பாது காப்புக்குழு வலியுறுத்தி யுள்ளது.

     இது குறித்து புதுச்சேரி ஜிப்மர் பாதுகாப்புக்குழு தலை வர் தா.முருகன் வெளியிட்டி ருக்கும் செய்தி குறிப்பு வரு மாறு:-

     ஜிப்மர் நிறுவனத்தில் கடந்த  1 ஆம் தேதியிலிருந்து மும்பை யைச் சேர்ந்த ஒரு தனியார் சேவை நிறுவனம், ஒப்பந்த தொழிலாளர்களின் நியமன உரிமையை பெற்றது.  

     ஜிப்மர் நிர்வாகத்தில் ஏற்கெனவே பணிபுரியும் அனைத்து தரப்பு ஊழியர்க ளுக்கும் புதிதாக ஒப்பந்தம் எடுத்திருக்கும் நிறுவனம் பணி வழங்க வேண்டும் என்று ஒப்பந்த கூட்டத்தின்போது முடிவு செய்யப்பட்டது.

    ஆனால், அந்த அந்நிறு வனம் 1,100 ஊழியர்களில் 500க்கும் மேற்பட்டோருக்கு அடையாள அட்டையை வழங் காமல் தனி நபர்களின் சிபாரி சின் பேரில் புதிய ஆட்களை பணியில் அமர்த்தும் வேலையை செய்து வருகிறது.

   கடந்த 6 மாதத்திற்கும் மேலாக ஜிப்மரில் பணி செய்து வரும் பெண் மற்றும் ஆண் ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்காமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார் தனியார் ஒப்பந்ததார். இது தொழிலாளர் நல சட்டத்திற்கு புறம்பானது. ஜிப்மரின் முன் அனுமதியும் பெறாமல்  இடைதரகர்கள் தான்தோன்றித் தனமாக செயல்படுகிறார்.

    கடந்த மாதம் ஜிப்மரில் ஆய்வு மேற்கொண்ட அகில  இந்திய தூய்மைப் பணி ஷயாளர் ஆணைய தலை வர் வெங்கடேசன், தூய்மை யாளராக பணிபுரியும் பெண் ஊழியர்களை முற்றிலும் பாது காப்பாக நடத்த வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் உரிமைகள் பாதுகாக்க வேண்டு மென ஜிப்மர் நிர்வாக இயக்கு நரை வலியுறுத்தினார்.

    எனவே, கடந்த மாதம் 31 ஆம் தேதி வரை பணியில்  அமர்த்தப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் அடையாள அட்டையை வழங்கி பணி ஆணை வழங்க ஜிப்மர் அதி காரிகளும், இயக்குநரும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்தி திருக்கிறார்.