சிதம்பரம், அக்.9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமராட்சி ஒன்றியக் குழுவின் 24-வது மாநாடு குமராட்சியில் நடைபெற்றது. மாநாட்டில் செங்கொடியை கட்சியின் மூத்த உறுப்பினர் முனுசாமி ஏற்றி வைத்தார். ஒன்றிய குழு உறுப்பினர் பால முருகன் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை மணிவண்ணன் வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். ஒன்றிய செயலாளர் மனோகரன் வேலை அறிக்கையை வாசித்தார். வரவு செலவு கணக்குகளை ஒன்றியக்குழு உறுப்பினர் மாசிலாமணி சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம். பி. தேன்மொழி வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமச்சந்திரன் மாநாட்டு நிறைவுறை ஆற்றி னார். மாநாட்டுத் தீர்மானங்களை கண்ணன், ஜெயக் குமார், புஷ்பராஜ், பிரபாகரன் ஆகியோர் முன்மொழிந்த னர். ரேவதி நன்றி கூறினார். ஒன்றியக்குழு தேர்வு 11 பேர் கொண்ட குமராட்சி ஒன்றியக்குழுச் செயலாளராக கே. மனோகரன் தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் குமராட்சி பகுதியில் உள்ள பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். வீராணம் ஏரியின் வெள்ளியங்கால் வாய்காலில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவேண்டும், கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு உரங்களை வழங்க வேண்டும், 2023-24 ஆம் ஆண்டு பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.