ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) அமைப்புத் தலைவர் வி.மோகன் பணி ஓய்வு பாராட்டு விழா தலைவர் எஸ்.ராமலிங்கம் தலைமையில் வெள்ளியன்று (ஏப்.28) நடைபெற்றது. இதில் ஐசிஎப் முதன்மை தலைமை தொழிலாளர் நல அதிகாரி மோகன் ராஜா, துணைத் தலைமை மெக்கானிக்கல் என்ஜினியர் ரவிச்சந்திரன், துணைத் தலைமை எலக்ட்ரிக்கல் என்ஜினியர் கோவிந்தராஜன், டி.ஆர்.இ.யூ. செயல் தலைவர் அ.ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ம.பூபாலன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, வட சென்னை மாவட்ட துணை தலைவர் பி.என்.உண்ணி, தட்சண ரயில்வே பென்சனர் யூனியன் தலைவர் ஆர்.இளங்கோவன், சங்கத்தின் செயல் தலைவர் வி.எம்.கிருஷ்ண குமார், பொதுச் செயலாளர் பா.ராஜாராமன், பொருளாளர் கே.ஜோஷி, கவுரவத் தலைவர் என்.வி.கிருஷ்ணாராவ், துணைச்செயலாளர் ஏ.சாண்டில்யன், ஆவடி மாநகராட்சி 10ஆவது வார்டு உறுப்பினர் அ.ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நிர்மல் பள்ளிக்கு 10 ஆயிரம் ரூபாய் வளர்ச்சி நிதி அளிக்கப்பட்டது.