districts

img

வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரணம் கடலூரில் துணை முதலமைச்சர் வழங்கினார்

கடலூர், டிச.3- கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பாதிப்பு களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.  மேலும் பாதிக்கப்பட்ட பகுதி களையும் அவர் பார்வையிட்டார். அப்போது, நெல்லிக்குப்பம் அடுத்த மேல் பட்டாம்பாக்கம் அண்ணா கிராமம்  தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட 1200 பேருக்கு புடவை, பெட்ஷீட் போர்வை, 5 கிலோ அரிசி மற்றும் உணவு பொருட்கள் ஆகிய தொகுப்புகளை வழங்கினார். கிராம மக்கள் கோரிக்கை குமாரபுரத்தில், மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு சாலை யோரம் நின்று கொண்டிருந்தனர்.  உடனடியாக காரை நிறுத்திய உதயநிதி ஸ்டாலின் அப்பகுதியில் தேங்கிய மழை நீரை பார்வை யிட்டார். பொதுமக்கள் அவரிடம் இந்த பகுதியில் அடிக்கடி மழைநீர் தேங்குகிறது. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதற்கு உதயநிதி ஸ்டாலின், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்தார். மருத்துவ முகாம் கடலூர் குறிஞ்சி நகர், பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் பாதிப்பு குறித்து புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டி ருந்தது அதை பார்வையிட்டு தென்பெண்ணையாற்று வெள்ளத்தையும் பார்த்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமையும் பார்வை யிட்டவர் தனியார் திருமண மண்டபத்தில் பாதுகாப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த பொது மக்களுக்கு நிவாரண உதவி களையும் வழங்கினார்.  அப்போது, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட கண்காணிப்பாளர் ராஜா ராமன், சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உள்ளிட்ட அதி காரிகள் கலந்து கொண்டனர்.