புதிய 5ஜி ஸ்மார்ட்போன்
சென்னை, அக் 4- விவோ நிறுவனம் தனது ‘டி மாடல்’ வரிசையில் புதிய விவோ டி2 புரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தி யாவில் அறிமுகம் செய்துள் ளது. இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 புராசச ருடன் சக்திவாய்ந்த 4nm 5G சிப்செட், இணையற்ற செயல்திறன் மற்றும் தடை யற்ற பயனர் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஒரு பிரீமியம் 120Hz 3D வளைந்த அமோல்ட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, 66 வாட்ஸ் பிளாஷ் சார்ஜ் தொழில் நுட்பத்தால் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு, நாள் முழுவதும் குறிப்பிடத்தக்க டர்போ செயல்திறனை இந்த ஸ்மார்ட்போன் உறுதி செய்யும் என விவோ நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கி றது.
வர்த்தகர்களுக்கான பொம்மை கண்காட்சி துவக்கம்
சென்னை, அக். 4- சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வர்த்தகர்க ளுக்கான பொம்மை கண்காட்சி புதன்கிழமை (அக். 4) தொடங்கியது. தமிழ்நாடு பொம்மை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சந்தோஷ்குமார், துணைத் தலைவர் வினய்குமார், செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் ரோகேஷ் ஜெயின் ஆகியோர் துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சி வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் எஸ்.சந்தோஷ்குமார் கூறுகையில், தமிழ்நாடு பொம்மை வியாபாரிகள் சங்கம் 9 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. அகில இந்திய சங்கத்துடன் இணைந்துள்ளோம். வர்த்த கத்தை எளிதாக்குவதற்காக, நாடு முழுவதும் உள்ள உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்து வதற்காக வருடாந்திர கண்காட்சிகளை நடத்துகிறோம். மாநிலம் முழுவதும் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் இந்த கண்காட்சிக்கு வருகை தருவார்கள் என்றார். ஆண்டுக்கு ஆண்டு இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டும் 150க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
சென்னை,அக்.4- கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரிஷி கவுதம் (வயது24). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் சென்னையில் தங்கி தர மணியில் உள்ள ஐ.டி.நிறுவ னத்தில் வேலை பார்த்து வந்தார். அசோக் நகர் அடுத்த ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் சிக்னல் அருகே பேருந்துவிலிருந்து இறங்கிய ரிஷி கவுதம் பின்னர் 100 அடி சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே கும்பகோணத்தி லிருந்து சென்னை நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து எதிர்பாராத விதமாக ரிஷி கவுதம் மீது மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய ரிஷிகவுதம் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கல்குவாரி வெடி விபத்தில் கர்ப்பிணி காயம்
விழுப்புரம்,அக்.4- திண்டிவனம் அருகே உள்ள தென்னம்பூண்டியை சேர்ந்தவர் ஜீவரத்தினம் .இவரது மனைவி ஜனனி (24). அதே பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் வெடி வெடித்ததில் மலை கற்கள் பெயர்ந்து வந்து ஜனனியின் வீட்டின் மேல் கூரையில் விழுந்தது. இதில் மேற்கூரை முழுவதும் சேதமடைந்து வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த ஜனனியின் மீது விழுந்ததில் பலத்த காய மடைந்தார் . உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
நெடுந்தூர ஓட்டப் போட்டி
கள்ளக்குறிச்சி, அக்.4- அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி அக்.10 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 17 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ. தூரமும் பெண்களுக்கு 5 கி.மீ தூரமும் நடத்தப்படுகிறது. 25 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் ஆண்களுக்கு 10 கி.மீ தூரமும் பெண்களுக்கு 5 கி.மீ தூரமும் ஓட்டப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ. 3000, மூன்றாம் பரிசாக ரூ. 2000 மற்றும் ஆறுதல் பரிசாக 4 முதல் 10 இடங்களை பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா ரூ.1000 வீதம் 28 நபர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த போட்டிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி கச்சிராயபாளையம் சாலை வழியாக சென்று விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஏர்வாய்ப்பட்டினத்தில் முடிவடைகிறது. போட்டியில் பங்கேற்கும் நபர்கள் உரிய மருத்துவ தகுதிச் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் பங்கேற்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்திருக்கிறார்.
கட்டுரை போட்டி
கிருஷ்ணகிரி,அக்.4- கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள வேளாங்கண்ணி பள்ளியில் மகாத்மா காந்தி,அறிஞர் அண்ணா பிறந்த நாட்களை ஒட்டி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வேளாங்கண்ணி பள்ளி, அறிஞர் அண்ணா கலை கல்லூரி குழுமங்களின் தலைவர் கூத்தரசன் தலைமை தாங்கினார். அதியமான் பொறியியல் கல்லூரி குழுமங்களின் நிறுவனரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிதுரை கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.
மாணவர் குத்திக் கொலை
கடலூர், அக்.4- கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மேல்புளியங்குடி பழைய காலனியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஜீவா 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரும், அதே பகுதி சுப்பிரமணியன் மகன் ஆனந்த், 22, என்பவரும் நண்பர்கள். ஆனந்த், மின்துறையில் தற்காலிக ஊழியர்.இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. இதற்கிடையே, இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவருடன் ஜீவா பேசியதை ஆனந்த், ‘ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து மிரட்டியுள்ளார்.இந்நிலையில், ஜீவாவிடம் தகராறு செய்து, கத்தியால் 11 இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு, ஆனந்த் தப்பி ஓடிவிட்டார். இதில், ஜீவா மரணமடைந்தார். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர்ஆனந்தை தேடி வருகின்றனர்.
ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கடலூர்,அக்.4- பி.எஸ்.என்.எல். அமைப்பு தினத்தை முன்னிட்டு 5 வயது முதல் 10 வயது வரை உள்ள பள்ளி மாணவர் களுக்கான ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதற்கு பிஎஸ்என்எல் கடலூர் முதன்மை பொது மேலாளர் திலகவதி தலைமை தாங்கி, போட்டி யில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசு மற்றும் சான்று வழங்கி பாராட்டி னார். முதலிடம் பிடித்த மாண வருக்கு ஓராண்டுக்கு இலவசமாக பாரத் பைபர் இணைப்பும், இரண்டாம் இடம் பிடித்தவருக்கு 6 மாதத்திற்கான இணைப்பும், 3-ம் இடம் பிடித்த மாணவருக்கு 3 மாதத்திற்கான பாரத் பைபர் இணைப்பும் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணைப் பொது மேலாளர் ஜெய கிருஷ்ணன், உதவி பொது மேலாளர்கள் நவீனா, சுமா, வெங்கடேசன், ஜெயலால், சசிகலா, ராஜவேல் மற்றும் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.