districts

முறையான சிகிச்சையளிக்கப்படாத காரணத்தால் கர்ப்பிணி பலி

சென்னை, ஏப்.7 சென்னை புளியந்தோப்பு சமுதாய நல மருத்துவமனையில் உரிய மருத்துவர்கள் இல்லாத தாலும், முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தினாலும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கே.பி பார்க் குடியிருப்பை சார்ந்த  ஜனகவள்ளி மருத்துவமனை யிலேயே உயிரிழந்தார்.   அவர் இறந்த செய்தியை மறைத்து ஆம்புலன்ஸ் மூலம்  எழும்பூர் மகப்பேறு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர். அங்கே மருத்துவமனை நிர்வாகம், ஏற்கனவே ஜனகவள்ளி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மாநகராட்சி மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும்  சிகிச்சை அளிக்காமல் நிறைமாத கர்ப்பிணி இறந்ததால்,  உறவினர் களும், பொதுமக்களும் மருத்துவ மனையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவ நிர்வாகம் மீது உரிய  நடவடிக்கை எடுக்க கோரி வெள்ளி யன்று  (ஏப்.7) புளியந்தோப்பு  காவல்  நிலையம் முன்பு பெண்ணின் உறவினர்கள் மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர்.போராட்டத்தின் காரணமாக காவல் துணை ஆணை யாளர் ஈஸ்வரன் நேரில் வந்து மருத்து வமனை நிர்வாகம் மீது நடவடிக்கை கள் எடுப்பதற்கு மருத்துவ கல்வி இயக்குநருக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பினார். இழப்பீட்டை பெற்றுத் தருவதாகவும் உறுதி அளித்தார்.  இந்த போராட்டத்தில் பொது  மக்களோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் பகுதி செயலாளர் கே.முரு கன், பகுதிக்குழு உறுப்பினர்கள் சித்தார்த்தன், நாகராணி, சிந்துஜா, ஆரோக்கியதாஸ் ஆகியோர் பங்கேற்றனர் உயிரிழந்த ஜனக வள்ளி உடல் ஸ்டான்லி மருத்துவ மனையில் உடற்கூராய்வு செய்யப் பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக் கப்பட்டது. அவரது உடலுக்கு கட்சி  மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.