விழுப்புரம், ஏப்.27- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விழுப்புரம் மாவட்டம் விளையாட்டுயரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் கற்றுக் கொள்ளும் திட்டம் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திட தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி வகுப்பு, முதல் வகுப்பு நிறைவு பெற்றது. இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. மூன்றாம் கட்ட பயிற்சி மே 1 ஆம்தே திமுதல் 14 ஆம் தேதி வரையும் நான்காம் கட்ட பயிற்சி மே 16 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதிவரையும் ஐந்தாம் கட்ட பயிற்சி ஜூன் 1ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையும் நடத்தப்படவுள்ளது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். கட்டணம் மேலும் 12 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். 12 நாட்களுக்கு பயிற்சி கட்டணம் ரூபாய் 1770/- ஆகும். கட்டணம் செலுத்த வரும் பொழுது ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும். ஒருவருக்கான பயிற்சி நேரம் ஒரு மணி நேரம் ஆகும். நீச்சல் குளம் திங்கள் கிழமை மட்டும் விடுமுறையாகும். எனவே மேற்கண்ட வகுப்புகளில் விழுப்புரம் மாவட்டத் தில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெறவும் மற்றும் இது தொடர்பாக இதர விபரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நோரிலோ, அல்லது தொலைபேசியிலோ 9786471821, 9566499010, 7401703485 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி. பழனி தொரிவித்துள்ளார்.