ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போளூர் சாலை அண்ணா நுழைவு வாயில் அருகில் இருந்து ஊர்வலமாக சென்று மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், எஸ். ராமதாஸ், எம்.பிரகலாதன், ஏ. லட்சுமணன், கே.வாசுகி, மாவட்ட குழு உறுப்பினர்கள் இரா.பாரி, அண்ணாமலை உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.