districts

img

ரயில் நிலைய உண்ணாநிலை போராட்டம் ஒத்திவைப்பு

சிதம்பரம், அக்.27- பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சிதம்பரம் ரயில் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று ரயில் பயணிகள் நலச்சங்கம், நுகர்வோர் கூட்டமைப்பு, வர்த்தக சங்கம் மற்றும் அனைத்து கட்சி சார்பில் அறி விக்கப்பட்டது. இதையடுத்து, சிதம்பரம் உதவி ஆட்சி யர் சுவேதா சுமன் அமைதிப் பேச்சு கூட்டம் நடத்தினார். இதில்  டிஎஸ்பி ரூபன் குமார் (பொறுப்பு) வட்டாட்சியர் செல்வ குமார், ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் ராஜேந்திரன், முதன்மை வர்த்தக ஆய்வாளர் ரவிச்சந்திரன், சிதம்பரம் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் அருண்குமார், இருப்புப்பாதை பாது காப்பு படை ஆய்வாளர் சுதீர் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அரங்க.தமிழ்ஒளி, சிபிஎம் மாநிலக் உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ் பாபு, நகர செயலாளர் ராஜா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை-கோவை ஜன்சதாப்தி விரைவு வண்டி, மைசூர்-மயிலாடுதுறை விரைவு ரயில் சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். அயோத்தி - ராமேஸ்வரம் சாரதா சேது விரைவு வண்டி, தாம்பரம்-செங்கோட்டை, சென்னை எழும்பூர்-காரைக்கால் ஆகிய 3 ரயில்களும் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து திருச்சி கோட்ட அலு வலகத்திலிருந்து சென்னை முதன்மை பயணிகள் போக்குவரத்து செயலாளருக்கு ஒரு மாத காலத்திற்குள் கருத்துரு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி யளித்தனர். அதை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.