சென்னை, டிச.18- சென்னை மாநகராட்சியின் சார்பில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவ ரொட்டிகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு, தொடர்புடைய நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் சென்னையில் 15 மண்ட லங்களிலும் சுவரொட்டி ஒட்டிய நபர்களின் மீது ரூ.1,37,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் 01.12.2022 முதல் 15.12.2022 வரை ரூ.1,21,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகரின் அழகை சீர்குலைக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்க ளின் மீது மாநகராட்சியின் சார்பில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 15 நாட்களில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டிய 252 நபர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகரை தூய்மையுடனும், அழகுடனும் பராமரிக்க மாநகராட்சியின் சார்பில் கண் கவரும் வண்ண ஓவியங்கள் வரைதல், செயற்கை நீரூற்றுகள் அமைத்தல், சாலை மையத் தடுப்புகளில் அழகிய செடிகளை அமைத்தல் என பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தவிர்ப்பதில் பொது மக்கள் மற்றும் பிற அமைப்புகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். எனவே, சென்னை மாநகரில் பொது இடங்கள் மற்றும் மாநகராட்சி, அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ள தெரு, சாலைகளின் பெயர் பலகைகள், இதர அறிவிப்பு பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.