districts

img

அடிப்படைவசதிகள் கிடைக்காத இருளர் மக்கள்

திருவள்ளூர், நவ .9- தொடுகாடு பகுதியில்  இருளர் இன மக்களுக் கென ஒதுக்கிய இடத்தில் அடிப்படை  வசதிகளை செய்து தர வேண்டும் என  வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் சார்பில் புதனன்று (நவ 8), கடம்பத்தூர் பிடிஒ  அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் வட்டத்தில் திருப்பாச்சூர், நரசமங்கலம்,ஏகாட்டூர், அதிகத்தூர், பிஞ்சிவாக்கம், கடம்பத்தூர் ஆற்றங்கரை, சதுரங்க பேட்டை, நயப் பாக்கம் போன்ற பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்நிலை புறம்போக்கில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்த பழங்குடி இருளர் இன மக்களுக்கு குடிமனை பட்டா கேட்டு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் தொடர் போராட்டத் தினால் இருளர் இன மக்களுக்கு மாற்று இடமாக 217 குடும்பங்களுக்கு 2022 ஆம் ஆண்டு தொடுகாடு ஊராட்சியில் குடிமனை பட்டா வழங்கப்பட்டது. அரசு ஒதுக்கிய தொடு காடு பகுதியில் இதுவரை 50 க்கும் மேற்பட்ட மக்கள் குடிசை அமைத்துள்ளனர். இதுவரையில் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, மின்சாரம் இல்லா மல் சிரமப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களின் அடிப்படை தேவைகள் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தி  இந்தப் போராட்டம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது 50 தொகுப்பு வீடு கள் கட்டுவதற்கான உத்தரவை வழங்கினார்.ஆழ்துளை கிணறு மற்றும் மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என  கடம்பத்தூர் பிடிஒ மெல்கி ராஜாசிங் தெரிவித்தார். வீட்டு மனை பிரிக்கும்போது சாலைக்கு என இடத்தை ஒதுக்கவில்லை என்பதால்,   சாலை அமைக்க முடிய வில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தெரி வித்தனர். இதற்கு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் இ.கங்கா துரை, மாவட்ட பொருளா ளர் எஸ்.குமரவேல், மாவட்ட குழு உறுப்பினர் அற்புதம், வழக்கறிஞர் சுதர்சனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.