districts

img

சிதம்பரத்தில் குளம் தூர்வாரும் பணி

சிதம்பரம், ஜூன் 11- சிதம்பரம் நக ராட்சிக்குட்பட்ட அண்ணா குளத்தை தூர்வாரி நடை பாதை மற்றும் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு ரூ.145 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இந்தப் பணியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி அண்ணாகுளத்தில் நடைபெற்றது. சிதம்ப ரம் நகர மன்றத் தலை வர் செந்தில்குமார் கலந்து கொண்டு தூய்மைக்கான உறுதி மொழியை நகராட்சி ஊழியர்களுடன் எடுத்துக்  கொண்டார். நகரமன்ற துணைத் தலைவர் முத்துகுமரன், நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீனா, நகராட்சி பொறி யாளர் மகாராஜன், மூத்தநகர் மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், மணி, ஜெயசித்ரா பால சுப்ரமணியன் மற்றும் நகரமன்றஉறுப்பினர்கள்  நகராட்சி ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர்.