எண்ணூரில் எண்ணெய் கழிவு தேங்கியதற்கு சிபிசிஎல் நிறுவனம் காரணம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை
சென்னை, டிச. 12- சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவு தேங்கியதற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மிக்ஜம் புயல் பாதிப்பால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு மூழ்கிய நிலையில், வடசென்னை பகுதியில் மழை நீருடன் கச்சா எண்ணெய் கழிவுகளும் கலந்ததால் முகத்துவாரப் பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன. மேலும் எண்ணெய் படலங்கள் அருகில் உள்ள குடியிருப்புகளிலும் படர்ந்ததால் வீடுகள் முழுவதும் எண்ணெய் படலமாக காட்சியளிக்கிறது. மேலும் கடலில் 20 சதுர கி.மீ. தூரத்திற்கு எண்ணெய் கலந்துள்ளதாக கடலோர காவல்படை நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து கடலில் பரவி உள்ள எண்ணெய் கழிவுகள் மேலும் பரவு வதை தடுக்க கடலோர காவல் படை ஹெலி காப்டர் மூலம் ஆயில் ஸ்லிட் டிசால்வன்ட் என்னும் எண்ணெய் கரைப்பானை கடலில் தெளித்தனர். இதனிடையே எண்ணெய் கசிவிற்கு யார் காரணம் என கண்டறிய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் குழு ஒன்றை நியமித்தது. அந்த குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, எண்ணூர் கழிமுகத்தில் எண்ணெய் கசிவு கலந்ததற்கு பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான சிபிசிஎல் காரணம் என மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து சிபிசிஎல் நிறுவனத் துக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. பக்கிங்காம் கால்வாயில் உள்ள எண்ணெய் கசிவுகளை சுத்தப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை கள் எடுக்க வேண்டும். சிபிசிஎல் நிறுவனத் தில் உள்ள அனைத்து குழாய்கள், தொட்டி களில் எந்த ஒரு கசிவும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். தொழிற்சாலை யில் இருந்து எண்ணெய் கழிவுகள் மற்றும் மாசுபட்ட தண்ணீரை நிர்ணயிக்கப்பட்ட விதி முறைகளை மீறி வெளியேற்றினால் தொழிற் சாலையின் செயல்பாடுகள் முடக்கப்படும். தொழிற்சாலை சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதங்களுக்கு பொறுப்பேற்பதுடன் அதற்கான இழப்பீடுகளை நிறுவனம்தான் வழங்க வேண்டும். பக்கிங்காம் கால்வா யில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு சிபிசிஎல் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு வழிகாட்டுதலை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ளது.
ஏரி நீரில் மூழ்கிய கிணறு: சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு
செங்கல்பட்டு, டிச.12- செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலமையூர் ஊராட்சிக்குட்பட்ட கே.கே.நகர், வ.உ.சி நகருக்குட்பட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு வ.உ.சி நகர் ஏரியில் கிணறு அமைத்து குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பெய்த கன மழையால் வஉசி நகர் ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால் குடிதண்ணீர் கிணறும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேலும் குறிப்பிட்டுள்ள இந்த குடிதண்ணீர் கிணறு அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலை வில் அப்பகுதியின் சுடுகாடு அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டில் பிணங்கள் புதைக்கப்பட்ட பகுதியும் தற்போது ஏரி நீரில் முழுவதும் மூழ்கியுள்ளது. இந்நிலையில் இந்த கிணற்றிலிருந்து தண்ணீர் கே.கே. நகர் மற்றும் வ.உ.சி. நகர் பகுதிக்கு வழங்கப் பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதிமக்க ளுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்ட போது, ஆண்டுதோறும் மழை பெய்து ஏரி நிரம்பினால் இதே நிலை ஏற்படுகிறது. கடந்த ஒரு வார காலமாக இந்த கிணற்றில் இருந்தே எங்கள் பகுதிக்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது.
சென்னையில் நாளை இலவச மருத்துவ முகாம்
சென்னை,டிச.12- மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை யில் 25 இடங்களில் டிச.14 ஆம் தேதி காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை இலவச மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையில், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 25 இடங்களில் இந்த மருத்துவ முகாம் நடைபெறு கிறது. இம்மருத்துவ முகாமில் பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற் கின்றனர். இதில் குழந்தை கள், பெண்கள், முதியவர்க ளுக்கு நோய் தடுப்பு மருந்து கள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருவண்ணாமலை,டிச.12- திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 15 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள வேளாண் துறை மற்றும் விவ சாயம் சார்ந்த துறைகள் தோட்டக் கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டு றவுத்துறை, வருவாய்த்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். விவசாயிகள் மற்றும் விவ சாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொதுக் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்து, தனிநபர் குறைகள் குறித்து மனுக்களை அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் டிச. 27 உள்ளூர் விடுமுறை
கடலூர்,டிச.12- கடலூர் மாவட்டத்தில் டிசம்பர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- கடலூர் மாவட்டத்தில் டிச. 27 புதன்கிழமை சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா விழா நடைபெறுவதால் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் அனைத்திற்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 6 சனிக்கிழமையன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறையான டிச. 27 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.