மக்களவைத் தேர்தலில் வட சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து ராயபுரம் 48ஆவது வட்டத்தில் உள்ள பள்ளிவாசலில் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில் திமுக வட்டச் செயலாளர் எம்.எல்.ரவி, இம்ரன் (ஐடி விங்க்), சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, நிர்வாகிகள் டி.வெங்கட், எம்.எஸ்.ஜுகைப், எஸ்.பாப்பூ, ஆர்.லலிதா, காங்கிரஸ் வட்டச் செயலாளர் நஜ்மா ஷெரிப், தமுமுக வட்ட தலைவர் ஏ.பாரூக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.