districts

img

காவல்துறை பொய் வழக்கு: இருளர் இன மக்கள் ஆவேசம்!

விழுப்புரம், மார்ச் 28 - விழுப்புரம் மாவட்டத்தில் எந்த பகுதியில் திருட்டு நடந்தாலும் இருளர் இன மக்களை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அனழத்துச் செல்லும் காவலர்கள் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்துவது, உண்மைக்கு மாறாக வழக்குகளை பதிவு செய்வது, சிறை யில் அடைப்பது தொடர்கதை யாக இருக்கிறது.  கோயில்களில் திருடிய தாக இருளர் இனத்தை சேர்ந்த சிலர் மீது காவல்துறையினர் பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதனை இருளர் பாது காப்பு சங்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் ஆல்பர்ட் வெண்ணிலா தலைமையில் செஞ்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், இருளர் பாதுகாப்பு சங்கத் தலைவர் இளங்கோவன், பொதுச்செய லாளர்பொதுச் செயலாளர் ஆறுமுகம், பேராசிரியர் பிரபா கல்விமணி, விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவர் மாதவன், ஏ.கே.மணி (மதிமுக) உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.