திருவண்ணாமலை, டிச.18 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விளம்பர பேனரை கிழித்த பாஜகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திரு வண்ணாமலை மாவட்ட மாநாடு டிச.21-22 தேதி களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி மாநாட்டு விளம்பரப் பலகை திரு வண்ணாமலை பேருந்து நிலைய ஆட்டோ நிறுத்தம் அருகே வைக்கப்பட்டி ருந்தது. அந்த விளம்பர பலகையை வெள்ளியன்று (டிச.17) பாஜக நிர்வாகிகள் கிழித்து சேதப்படுத்தினர். விளம்பரப் பலகையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி ஊழி யர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வந்தார். அவருடன் காவல்துறை உயர்அதிகாரிகள் பேச்சு நடத்தினர். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தனர். இதனையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பாஜகவினரின் அராஜ கத்தை கண்டித்து சனிக்கிழமையன்று (டிச.18) செங்கம், போளூர், கலச பாக்கம், ஆரணி, செய்யார், வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பா ட்டங்கள் நடைபெற்றன.