பொன்னேரி, மே 21 - மழை நீர் ஓடை கால்வா யில் கழிவுநீர் கலப்பதினால் விஷமாக மாறியதால் 50க்கும் மேற்பட்ட வாத்துக் கள் இறந்தன. பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சிக் குட்பட்ட டிவி புரம், தடபெரும் பாக்கம் காலனி துரைசாமி நகர், திருவெங்கடபுரம் சாய் நகர், தசரத நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மழைக்காலங்களில் பெய்து வரும் மழை நீர் வழிந்தோடி பொன்னேரி மீஞ்சூர் நெடுஞ்சாலை அருகில் உள்ள மழை நீர் ஓடை கால் வாய் வழியாக வெள்ள குளம் பகுதிக்கு சென்று ஆற்றில் கலக்கிறது. மழை நீர் ஓடை கால்வா யில் ஆடு, கோழி கழிவுகள் குப்பைகள் மற்றும் செடி கொடிகளால் புதர்மண்டி காணப்படுகின்றன. இந்த நிலையில் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளின் கழிவு நீர் தொட்டியில் இருந்து டிராக்டர் மூலம் வெளி யேற்றப்படும் கழிவுநீர் மழைநீர் கால்வாயில் பகல் மற்றும் இரவு நேரங்களில் விடப்படுகிறது. இது நோய் பரவுவதற்கு காரணமாக உள்ள நிலையில் கொக்கு மேடு பகுதி மக்கள் மழைநீர் கால்வாயில் கழிவு நீரை கொட்டும்போது டிராக்டரை சிறைபிடித்தனர்.