districts

img

தூங்கும் வசதியுடன் கூடிய 200 வந்தே பாரத் ரயில்கள் ஐசிஎப்-ல் தயாரிக்க திட்டம்

சென்னை,டிச.21-  சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். எனப்படும் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் ரூ.97 கோடி செலவில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு டெல்லி-வாரணாசி, டெல்லி-கத்ரா இடையே இயக்கப்படுகிறது. தற்போது 7-வது வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் பணியை சென்னை ஐ.சி.எப். தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தலா 16 பெட்டிகளுடன் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரயில்வே துறை திட்டமிட்டு உள்ளது. வந்தே பாரத் ரயில் தற்போது பயணிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது. ஆனாலும் இந்த ரயிலில் சேர்கார் வசதியுடன் அமர்ந்து பயணிக்கும் இடங்கள் மட்டுமே உள்ளன. தற்போது தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் செல்லும் வந்தேபாரத் ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் அமைக்கப்பட உள்ளன. வந்தே பாரத் ரயிலில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகள் 11, 2 அடுக்கு ஏ.சி. பெட்டிகள் 4, ஒரு முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி என மொத்தம் 16 பெட்டிகள் இடம்பெறுகிறது. ஒரு 3 அடுக்கு ஏ.சி. பெட்டியில் 61 படுக்கைகளும், 2 அடுக்கு ஏ.சி. பெட்டியில் 48 படுக்கைகளும், முதல் வகுப்பு ஏ.சி. பெட்டியில் 24 படுக்கைகளும் இடம்பெறுகிறது. இந்த பெட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியும் செய்யப்படும். ஒவ்வொரு பெட்டியிலும் உதவியாளருக்கு படுக்கையுடன் ஒரு இடம் ஒதுக்கப்படும். தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ரயில்வே துறை டெண்டர் அழைப்பு விடுக்கிறது.