districts

சென்னை முக்கிய செய்திகள்

சென்னையை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க 200 நீர் நிலைகளை இணைக்க திட்டம்

சென்னை, மே 8- சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கை தடுக்கவும்,  நகரின் நீர் சேமிப்பு திறனை மேம்படுத்தவும் அடையாறு மற்றும் கோவளம் ஆற்றுப் படுகைகளில் உள்ள 200 நீர் நிலைகளை இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரி கள் கூறியதாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகிறது. குறிப்பாக  தாம்பரம், முடிச்சூர், ஆதனூர், மண்ணி வாக்கம் பகுதிகளில் போதுமான சேமிப்பு கட்டமைப்புகள் இல்லாததால் 90 சதவீத மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை  கருத்தில் கொண்டு ஆங்காங்கே நீர்நிலை களை தூர்வாரி இணைப்பு கால்வாய்களை உருவாக்கி தண்ணீரை சேமிக்க திட்டமிடப் பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கால்வாய்களை தூர்வாரி அதிகப்படியான தண்ணீரை நீர்நிலைகளுக்கு கொண்டு செல்ல வசதியாக தரைமட்டத்திற்கு கீழே மூடப் பட்ட கட்டமைப்புடன் வடிகால் கட்டப்படும். இவற்றை ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின்  தண்ணீர் தேவை ஆண்டுக்கு தற்போது 22 டி.எம்.சி.யாக உள்ளது. மக்கள் தொகை  பெருக்கம் மற்றும் தொழில் துறை விரிவாக்கம் காரணமாக 2030ஆம் ஆண்டுக் குள் 28 டி.எம்.சி.யாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய நகரின் நீர்  நிலைகளின் சேமிப்புத் திறனை அதிகரிப்பது இன்றியமையாதது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிசிடிவி கேமராக்களை  உடைத்து கொள்ளை

ராணிப்பேட்டை,மே 8 – ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பேரூ ராட்சிக்குட்பட்ட கலவை - சென்னசமுத்திரம் சாலையில் இந்து அற நிலைத்துறைக்கு சொந்த மான ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் செவ்வா யன்று (மே. 7) கோவில் பூசாரி வழக்கம் போல் பூஜைகள் முடித்து கோவிலை பூட்டி சென்றுள்ளார். புதனன்று (மே.8) கிருத்திகை என்பதால் அதிகாலை கோவிலை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கருவறை  கதவின் 4 பூட்டுகள், 4 சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டுள்ளது. கரு வறையில் இருந்த மூன்று வெள்ளி கிரீடங்களும், முருகன் வேலும்  திருடப்பட்டு உண்டியல் உடைத்து கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக கோவில் நிர்வாகம், காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து கலவை காவல் ஆய்வாளர் கவிதா தலைமையில் போலீசார் நேரில் சென்று சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

போக்குவரத்து கழகம் மேற்கொள்ளும் திட்டங்கள்  குறித்து வெளிப்படையாக அறிவித்திடுக! 

சிபிஎம் மத்திய சென்னை மாவட்டக்குழு வலியுறுத்தல்

சென்னை,மே 8- சென்னை பிராட்வே பேருந்து நிலையம் உள்ளிட்டு மாநகரப் போக்கு வரத்து கழகத்தின் இடங்களில் மேற்கொள்ள போகும் திட்டங்கள் குறித்து வெளிப்படையாக அறிவித்திட  வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மத்திய சென்னை  மாவட்டக்குழு சார்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச்செயலாளர் ஜி.செல்வா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:   சென்னையின் அடையாளமாக திகழும்  பிராட்வே பேருந்து நிலையம்  மற்றும் குறளகம் கட்டிடத்தை இடித்து,  ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்தை, பன்னடுக்கு வணிக  வளாகத்தை தமிழக அரசு உருவாக்கப்  போவதாக தெரிய வருகிறது. இதற்கு ஏற்ப பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக தீவுத்திடலுக்கு மாற்றப் போவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. பிராட்வே பேருந்து நிலையம் மட்டுமின்றி, மாநகரப் போக்குவரத்து கழகத்தின் தலைமை இடமான அதிக பரப்பளவு கொண்ட பல்லவன் இல்லம் உள்ளிட்ட சென்னை மாநகரின் பல்வேறு அரசு பேருந்து நிலையங்களின் இடத்தை தனியார் உதவியோடு வணிக வளாகங்களாக ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது சார்ந்து கொள்கை அறிவிப்பு கடந்த சட்ட மன்ற கூட்டத் தொடரின் போது வெளியிடப்பட்டாலும், திட்டத்தின் தன்மை குறித்தும், அதன் மூலம் ஏற்படப்  போகும் பயன்பாடுகள், விளைவுகள் குறித்தும் பொதுமக்களுக்கு எவ்வித மான விவரங்களும் அரசு தரப்பில்  இருந்து இதுவரை தெரிவிக்கப்பட வில்லை.  அரசு வருமானம் ஈட்டுவதற் காக எம்டிசி/ எஸ்இடிசி யின் சொத்துக் களை பணமயமாக்குதல் என்ற நோக்கத்தில்  அரசு சொத்துக்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை முடக்குவதோடு, மக்களுக்கு இதுவரை கிடைத்து வரும் அரசின் பொது போக்குவரத்து சேவையும் பாதிப்புக்கு உள்ளாகும். பிராட்வே பேருந்து நிலையத்தை இடித்து பேருந்து முனையம் மற்றும் வணிக வளாகம் உருவாக்கும் திட்டத் தின் தன்மை குறித்து 2024 ஜனவரி  மாத தொடக்கத்தில் பேருந்து நிலை யத்தில் கடைகளில், நடைபாதைகளில் வியாபாரம் செய்து வரும் வியாபாரி கள்  மாநகராட்சி மண்டல-5 அலுவலக   அதிகாரிகளை சந்தித்து கேட்டபோது, அப்படி ஒரு திட்டமே அரசிடம் இல்லை  என தெரிவித்து விட்டனர். ஆனால், தேர்தல் முடிந்தவுடன் ஏப்ரல் 26 அன்று   மாநகராட்சி அதிகாரி கள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை  அழைத்து, பேருந்து முனையம் மற்றும்  வணிக வளாகம் வரப்போவதாகவும், கடைகளுக்கான மாற்று இடங்கள்  குறித்து ஆலோசனை சொல்லுங்கள்  என கேட்டுள்ளனர். இது எதுவும்  எழுத்துப்பூர்வமாக நடைபெற வில்லை. மேலும் திட்டத்தின் தன்மை  குறித்தும் மாநகராட்சி அதிகாரிகள் வெளிப்படையாக எதுவும் பேச வில்லை. எனவே, பிராட்வே பேருந்து நிலை யம் உள்ளிட்ட சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் இடங்களில் மேற்கொள்ள போகும் திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில்  வெளிப்படையாக அறிவிப்பதோடு, திட்டத்தின் சாத்தியக்கூறு அறிக் கையை அனைத்து அரசியல் கட்சிகள், மக்கள் அமைப்புகளுடன் பகிர்ந்து, ஆலோசனைகளை உள்வாங்கி திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என சிபிஎம் மத்தியசென்னை மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வேங்கைவயல்: 3 பேருக்கு  குரல் மாதிரி  பரிசோதனை

புதுக்கோட்டை, மே 8 - வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கான குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், 3 பேருக்கு சென்னையிலுள்ள தடயவியல் ஆய்வகத்தில் புதன்கிழமையன்று குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கெனவே ஒரு காவலர் உள்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 31 பேரிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதிக்கவில்லை. இந்நிலையிலேயே புதனன்று சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட 3 பேருக்கு அங்கு குரல் மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.